Monday, October 19, 2009

வீடு எப்ப‌டியோ நாடும் அப்ப‌டியே

கடவுள் இல்லை,கடவுள் இல்லை
கடவுள் என்பது மாயை
கடவுளை கும்பிடுபவன் முட்டாள்
தன்னம்பிக்கை இல்லாதவன்
நம்பிக்கையை கடவுள்
நற்திசை சென்று முழங்கிடுவார்
கடவுள்மறுப்பு நண்பர் ஒருவர்

வேதங்கள் பொய்
ஓதும்மந்திரங்கள் பொய்
சாஸ்திரம் வேண்டாம்
சம்பிரதாயமும் வேண்டாம்
இழிவானது இதிகாசங்கள் ‍
புத்தியில்லாதவரின் புனைவே வேதநூல்
வாதிடுவார் தெருவெங்கும்

தீபதிருநாளன்று
வீட்டிற்கு வந்தவரை
சாப்பிட‌ அழைத்தோம்
பெருமாளை சேவித்து
புர‌ட்டாசி விர‌த‌ம்
புலாலுண‌வு வேண்டாம் ம‌றுத்திட்டார்
க‌ட‌வுள் ம‌றுப்பு அன்பு ம‌ணைவி

க‌டைதெருவில் க‌ண்டு
வேள்விக‌ணை தொடுத்தேன்
க‌ட‌வுள்ம‌றுப்பு ந‌ண்ப‌ரிட‌ம்
க‌ண‌பொழுதில் ப‌திலுரைத்தார்
த‌னிம‌னித‌ சுக‌ந்திர‌த்தை போற்றுப‌வ‌ன்
வீட்டில்வுள்ளோர் விருப்ப‌த்தை த‌டுப்ப‌தில்லை.

இன்று இவ‌ர் சொல்லிய‌து கேட்டு
நினைவுக்கு வ‌ந்த‌து
அன்று அண்ணா சொன்ன‌து
வீடு எப்ப‌டியோ நாடும் அப்ப‌டியே



(பி,கு இது என்னுடைய நெருங்கிய நண்பரிடம் நான் கேட்ட கேள்வியின் வெளிபாடு பதிவுலக கடவுள்மறுப்பாளர்களை பற்றியல்ல.)

Friday, October 16, 2009

தீபாவளி திருநாள் வாழ்த்துக‌ள்

தீயென அழிந்து
தீபஒளி பரவட்டும் பதிவுலகெங்கும்

தினம்தினம் தோன்றும்
நவீன நரகாசுரன்களின் தீமைகள் ஒழிந்து
தீப‌ இன்ப‌ம் பெருக‌ட்டும்

திகட்டாத‌ அன்போடு
தித்திக்கும் இனிப்போடு
ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக‌ள்