Sunday, May 31, 2009

கேள்விக்கு என்ன பதில்

கேள்வி பதில் தொடர்பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் லோகுவின்

அன்புகட்டளை ஏற்று தொடர்கிறேன்



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஏழாவது படிக்கும் போது புதிதாக வந்த தமிழ் ஆசிரியர் யாருடா நல்ல கதை
சொல்வாங்கன்னு கேட்க, பசங்க எல்லாம் என்னை கைகாட்டி நல்ல கதைவுடுவான் அய்யா இவன்ன்னு சொல்ல,உன் பெயர் என்ன? என்றார் நான் பெயரை சொன்னவுடன் இததென்டா வாயில் நுழையாத பெயரா இருக்கு,சரி ராசா வந்து செய்யுளை சொல்ராசா என்றார்.செய்யுள் பாடம் நடத்தும் போது மாணவர்களை செய்யுள் சொல்ல சொல்லி விளக்கம் தருவது அவருடைய பழக்கமாம் நான் செய்யுளை ஏற்ற இறக்கதுடன் சொல்வதை கேட்டு செய்யுள்பாடம் நடத்தும்போது எல்லாம் என்னை "ராசா செய்யுளை சொல்ராசா" என்று கூப்பிடுவதை வைத்து சொல்ராசா என்று பட்ட பெயரிலே பள்ளி நண்பர்கள் அழைக்க ஆரம்பித்து சொல்ராசா,சொல்லரசு ஆகி பள்ளி இறுதியில் சொல்லரசன்ஆகிவிட்டது.பதிவு எழுதமுடிவு எடுத்தபோது இந்த பெயரிலே பிளாக் ஆரம்பித்து விட்டேன்.இந்த பெயர் என்றுதான் கேள்வியிருக்கிறது அதனால் இயற்பெயர் காரணத்தை சொல்லவில்லை.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நையான்டி நைனா பதிவ படிக்கும்போது......
உண்மைதானுங்கோ சிரிச்சா எனக்கு கண்ணீர் வரும்,
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் சிரித்துகொண்டே அழுவேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பள்ளி நண்பர்கள் உன் கையெழுத்து நல்ல இருக்குடான் சொல்லி அவங்க ரெக்காட எழுதவைச்சுறுவானுங்க.இப்ப என் பெண் அப்பா உங்க கையெழுத்து நல்ல இருக்குன்னு சொல்லி அவ ஹோம்ஒர்க்க எழுதவைச்சிருரா அவங்களுக்கு பிடிப்பதால் எனக்கும் பிடிக்கும்
4.பிடித்த மதிய உணவு என்ன?
மீன்குழம்பு,மீன்வருவலுடன் சாப்பாடு,மட்டன் பிரியாணி சிக்கன் வருவல்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
முதல் சந்திப்பிலேயே ஒருவரை பற்றி அறிந்துகொள்வேன்
நல்லவராக தெரிந்தால் நட்பு தொடரும்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஆற்றில்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களை
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசறது.
பிடிக்காத விஷயம்: வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசறது.(சில பேர் மூஞ்சிக்கு நேரா இப்படி பேசுகிறான் என்று வருத்தபடும்போது)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் சுட சுட தோசை ஊற்றி கொடுப்பது
பிடிக்காதது அட்சயதிததி மற்றும் ஆடிதள்ளுபடியின் போது நச்சரிப்பு.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா அப்பா
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அடர் பச்சை நிற பேன்ட்,இளம் பச்சையில் வெள்ளை கோடு போட்ட சட்டை
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
10X11 ரூமுக்குள் உட்கார்ந்து என்னத்த பார்க்க முடியும் கணனிதிரையை
நான் ராகுல்காந்தி மாதிரி, ஒருசமயத்தில் ஒரு வேளைதான் செய்யமுடியும்
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெளீர்நீல நிறம்
14.பிடித்த மணம்?
மல்லிகை வாசனை
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அனைத்து விச‌ய‌த்தையும் நையான்டியாக‌ எழுதும் நையான்டி நைனா. அனைத்தையும் சாமானிய‌ன் அறிந்துகொள்ள‌வேண்டும் என‌ ஆசைப‌டும் ஆ.ஞான‌சேக‌ர‌ன்.
குடந்தை அன்புமணி கதை,கவிதை, சமுதாய சிந்தனை என இவர் கலந்துகட்டியடிப்பது பிடிக்கும்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அனைத்து விசய பதிவுகளும் ரசிக்கதக்கது
17. பிடித்த விளையாட்டு?
கபடி,கைப்பந்து,ஹாக்கி.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை...
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
முழு நீள நகைச்சுவை படங்கள்
20.கடைசியாகப் பார்த்த படம்?
முதல்வன் ,தியேட்டருக்கு போய் படம் பார்த்து பல‌ ஆண்டுகள் ஆச்சு.
21.பிடித்த பருவ காலம் எது?
எல்லாகால‌மும்
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
அர்த்த‌முள்ள‌ இந்து ம‌த‌ம் மூன்றாம் பாக‌ம்
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மூன்றுமாத‌த்திற்கு ஒருமுறை
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்:ம‌ழ‌லையின் சிரிப்பு
பிடிக்காத சத்தம்: அர‌சிய‌ல்வாதியின் சிரிப்பு
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அஹ‌ம‌த்ந‌க‌ர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தேட‌வேண்டும்
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
முய‌ற்சிக்காம‌ல் முடியாது என்று சொல்வ‌து
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான் என்னிட‌த்தில் த‌ங்க‌ அனும‌தியில்லை
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
மூனாறு
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஆசையில்லா ம‌னித‌னாக‌
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் த‌...........(என் ம‌னைவியும் இதை ப‌டிப்ப‌தால் த‌ணிக்கைசெய்துவிட்டேன் புரிந்த‌வ‌ர்க‌ள் புரிந்துகொள்ளுங்கள்)
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
க‌ட‌வுள் ந‌ம‌க்கு அளித்த‌ அற்புத‌ப‌ய‌ன‌ம்,எளிமையாக்குவ‌தும் க‌டினமாக்குவ‌தும் ந‌ம்கையில்.




Thursday, May 28, 2009

கார்த்திகைப் பாண்டியன்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்



முகமறிய பதிவரையும்
முத்தான எழுத்தால்
அகமகிழ செய்து
புறமறிந்து நேசகரம் நீட்டிய
பாசமிகு பாண்டியரே!

முவர் சந்திப்பை
பதிவர் கூட்டம்மென
பதிவிட்டு பதிவுலகம் அறியசெய்த
மதுரைகார தம்பியே..

கணினியே கதியாக
கல்லுரியில் தவமாக
பதிவிட்டு பதிலிட்ட
பண்டிகை பாண்டியா!

நையான்டியே பின்தொடர்ந்து
நைய புடைத்தாலும்
நயமாக பேசி
நட்பு பாராட்டும் நல்லவனே!


பலநூறு பதிவுகண்டு
பல்லாயிரம் பதிவர்கண்டு
பலலட்சம் பார்வை கொண்டு
வாழ்க பல்லாண்டு.



(பி.கு) நம்ம கா.பா விற்கு பெண்தேடிகொண்டு இருக்கிறார்கள் ஏதோ நம்மால் முடிந்த விளம்பரம். நமீதா மசாலா விளம்பரம் செய்பவர் இதை தவறாக‌
எடுத்துகொள்ளவேண்டாம்

Sunday, May 17, 2009

எரியிற கொள்ளியில்...........தேர்தல் முடிவு.

நடந்து முடிந்த தேர்தலின்முடிவு பெரும்பாலன வலைபதிவர்களுக்கு அதிர்ச்சியாக‌இருக்கும்,ஏனெனில் ஈழபிரச்சனையை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தல் போல்ஒரு தோற்றத்தை உருவாக்கி,அதில்பெரிய‌பாதிப்பு இல்லாதால் சற்று அதிர்ச்சிதான்.ஈழபிரச்சனை மக்களிடையே எந்தமாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை என்பது எனதுகருத்து.ஈழ விரோதி கலைஞர்க்கு எதிராக வாக்களிக்க சொன்னவர்கள் எதிர்முகாமில் இருந்தவர்கள் ஈழஆதரவாளர்கள் என மக்கள்ஏற்று கொண்டர்களா என்று அறிந்துகொள்ளவில்லை. அம்மையாரின் திடீர் ஈழத்து ஆதரவு, அரசியல்வேசியின் லாப நட்ட ஈழ ஆதரவுகணக்கு,பொதுவுடமை தோழரின்கொள்கையில்லாகூட்டு,இவையனைத்தும் மக்களை சிந்திக்கவைத்து,ஈழத்து பிரச்சனையில் அரசியல்வாதிகள் ஒன்றுமே செய்யமுடியாது, இது தேர்தல் நேரபாசமே என்பதைபுரிந்துகொண்டார்கள்.

இனி இவர்கள் அடுத்த தேர்தலுக்குதான் ஈழஆதரவு துருப்புசீட்டாக‌ கையில்எடுப்பார்கள், அதற்குள் எல்லாம் முடிந்துவிடும் அங்கே என்பதைமக்கள் அறிந்து கொண்டார்கள்.

தமிழக அரசியல்வாதிகளை புறம்தள்ளிவிட்டு சர்வேதேச அளவில் எடுத்து செல்ல என்னவழி என்று ஒவ்வொரு தமிழனும் வழிமுறை கானவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள நாம் இனியும் இந்த அரசியல்வாதிகளை நம்பாமால் ஈழ ஆதரவு கோரிக்கையை சர்வேதேச சமூகத்திற்கு தெரியபடுத்தவேண்டும்.

கொங்குமண்டலத்தில் ஈழ ஆதரவால் தி.மு.க கூட்டனிக்கு தோல்வி என்பதும்,சீமான், பாரதிராஜவின் பிரச்சாரமே தி.மு.க,காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று கூறினாலும், என்னைபொருத்தளவில்அறிவாலயத்தால் தொடர்ந்து புறக்கனிக்கப்படும் கொங்குமண்டல எழுச்சியே காரணம், கொங்குநாட்டு உடன்பிறப்புகளின் களபணிகளால் கொங்குமுன்னேற்ற‌பேரவையின் வாக்குகளை பார்த்தால்புரியும் உங்களுக்கு.

ஈரோடு
கனேசமுர்த்தி(மதிமுக) 284148
இளங்கோவன்(காங்) 234812
பாலசுப்பிரமணியம்(கொ.மு.பே) 106604

திருப்பூர்
சிவசாமி (அதிமுக) 295731
கார்வேந்தன் (காங்) 210385
பாலசுப்பிரமணியம்(கொ.மு.பே) 95299

கோவை
நடராஜன் (கம்யூ) 293165
பிரபு (காங்) 254501
ஈஸ்வரன் (கொ.மு.பே) 128070

பொள்ளாச்சி
சுகுமார் (அ.தி.மு.க) 305826
சன்முகசுந்தரம்(தி.மு.க) 258047
பெஸ்ட் ராமசாமி(கொ.மு.பே) 102834

நான்கு தொகுதிகளிலும் 4,32,807 வாக்குகள் கட்சிஆரம்பித்து முன்று மாதத்தில்வாங்கியிருப்பதில்,உடன்பிறப்புகளின் பங்கும் இதில் உண்டு.அறிவாலயத்தில் உடன்பிறப்புகளின் மேலுள்ள‌ பாராமுகம்,நிதியமைச்சர்ராக இருந்தபோது சிதம்பரத்தின் கொங்குமண்டல தொழில்சலுகை புறக்கணிப்பு,இதுவேகொ.மு.பே
எழுச்சியாக தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்தது. தி.மு.ககூட்டனி தோல்விக்கு இதுவே காரணம்.இனிமேலும் புறக்கணிப்பு தொடர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் அவர்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்.எனவே கொங்குமண்டலத்திலும் ஈழஆதரவு பிரச்சாரம்வெற்றி என்பதையும் ஏற்றுகொள்ள‌இயலவில்லை. மொத்ததில் எரியிற கொள்ளியில் எந்தகொள்ளி நல்லகொள்ளி கதையாகதான் இந்த தேர்தல் முடிவு.


Tuesday, May 12, 2009

இது ஜனநாயக தேர்தலா இல்லை பணநாயக தேர்தலா?


இங்க 1000? அங்க எவ்வளவு?


“ரேசன் அட்டை கொண்டு போன டோக்கன்கொடுத்துவிடுவார்கள்!”


கம்மியா கொடுத்த வாங்கதே!

ஏன் அவசரபடுகிறாய்? விடு தேடி வருவார்கள் கவலைப்படாதே.


இரண்டு நாட்களுக்கு இதுதானுங்க பரவலான பேச்சா இருக்குதுங்க நம்ம ஏரியாவில்.


இதில பணம் வாங்கலாமா? வேண்டாமா?

வாங்கினால் என்ன தப்பு அவங்க சொந்தபணத்தையா கொடுக்கறாங்க?


எல்லாம் நம்மகிட்ட கொள்ளையடிச்ச பணத்தில் கொஞ்ச‌த்தை திரும்பி
நமக்கே கொடுக்கிறானுங்க வாங்கிகவேண்டியதுதானே,இப்படி பட்டிமன்றமே
நடக்குதுங்க‌ அதனால‌நமக்கு சந்தேகம் இது ஜனநாயக‌தேர்தலா? இல்லை
பணநாயக தேர்தலா?

இந்த தேர்தலுக்கு 12800 கோடிரூபாய் செலவுசெய்கிறார்கள் அரசியல்கட்சியினர்
என்கிறது அரசியல் ஆய்வரிக்கை,இந்த பணம் எங்குயிருந்து வந்தது.இவ்வளவு
பணம் செலவு செய்பவர்கள் எவ்வளவு பணத்தை கொள்ளையடித்து இருப்பார்கள்
என்பது சுவிஸ் வங்கிக்கே வெளிச்சம்.


அரசு திட்டபணம் "படிப்படி" யாக குறைந்து கடைசியாக மக்களிடம் வந்து
சேரும்போது நான்கில் ஒரு பங்குதான்கிடைக்கும், அதுபோலதான் நேற்றுஆரம்பித்த
பண பட்டுவாடா தலைமையில் இருந்துமாவட்டம்,வட்டம்,வார்டுக்குவந்து
1000 க்கு 200 ஆக 500 க்கு 100 ஆக மக்களுக்கு வந்துகொண்டுஇருக்கிறது.
மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை சுருட்ட ஆரம்பிக்கும்
இவர்களா ஜனநாயக‌வாதிகள் இதுவா ஜனநாயக‌தேர்தல்.


இந்தபணநாயக தேர்தலில் கொள்கையே எங்கள் இலட்ச்சியம் என்ற கொள்கை
சிற்பிகளில் ஒருவர் தேர்தல்முடிவுக்கு முன்பே கூட்டணியில் இருந்துவிலகி
தாமரைகூட்டனிக்கு சென்றுவிட்டார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதுஅந்த
சந்திரசேகரகாருக்கே வெளிச்சம்.இந்த கூட்டனியில் முக்கியமானவர் தேர்தலுக்கு பின் ஆதரவுகொடுப்பதை ஆலோசிப்போம் என்று சொல்லி தனது காரத்தை குறைத்து கொண்டார் எவ்வளவு "கை" மாறபோகிறதோ தெரியவில்லை,வட மாநிலத்தில்இருக்கும் பஸ்... நாங்க இன்னும் கூட்டனியில்தான் இருக்கிறோம் மரியாதையாக கூப்பிட்டால் ரயில்லிருந்து இறங்கி வந்து கை கொடுப்போம்ன்னு அப்பட்டமாக சொல்கிறார்.
ரயிலும் தடம் புரள‌தயார் நிலையில் உள்ளது . என்னை முதல்வர் ஆக்குபவருக்கே ஆதரவு என்று குதிரை பேரத்திற்கு பெட்டி
தயார்செய்துவிட்டார்முலாயம்.இங்க மருத்துவர் மாங்கணிகளில் உள்ள இலையை பிய்த்துவிட்டு யார் வருகிறார்களோ அவர்களுக்கு கை யில்கொடுக்கலாமா அல்லது தாமரையில் வைக்கலாமா என்று இலாப நட்ட கணக்கு பார்க்க ஆடம்பித்துவிட்டார்.இதையெல்லாம் பார்க்கும்போதுங்க
நமக்கு சந்தேகம்வந்துருச்சிங்கோ,இந்த தேர்தலை பற்றி.
தமிழகத்தை பொருத்தவரை மதுரை முடிவைவைத்து
இது ஜனநாயக‌தேர்தலா இல்லை பணநாயக தேர்தலா?என்று நீங்களே தெரிந்து கொள்ளவும்



இரண்டு வாரமா வேலைபளு காரணமாக இந்த பக்கம் வரமுடியமா இருந்தாலும்,
இரண்டு நாளைக்கு ஒரு முறை போன் போட்ட பாசகார நண்பர்களே,
சிங்கபூரில் இருந்து நம்ம சாமானியன் சரக்குடன் (தமிழ்நாட்டு சரக்கு என்று அர்த்தம் கொள்ளவும்)
திருச்சிக்கு வந்து இருக்கிறார்.அவருடைய விருப்பபடி கடை விடுமுறை அன்று
அதானுங்க மே 13 தவறாம திருச்சிக்கு வந்து சரக்கை பகிர்ந்துகொள்ள
அன்புடன்அழைக்கிறேன்.அங்க வந்து சொல்லுங்க
இது ஜ‌னநாயக தேர்தலா இல்லை பணநாயக தேர்தலா?

Wednesday, April 22, 2009

பறக்க விட்டேன் பட்டாம்பூச்சியை!


அன்பார்ந்த பதிவுலகபெரியோர்களே,பாசமிகுநண்பர்களே,நேசமிகு கவிஞர்களே.சிந்தனை சிற்பிகளே.........
(தேர்தல் நேரபிரச்சார பேச்ச கேட்டு கேட்டு அதே மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்)
சரி விஷயத்திற்கு வரவோம்.மூன்று வாரத்திற்குமுன்பு நண்பர் கார்த்திகை பாண்டியன் போன்ல் கூப்பிட்டு நண்பா நம்ம பதிவு பாருங்க ஒரு மகிழ்ச்சியான செய்தின்னுசொன்னார்.நான்வெளியில் இருப்பதால்உடனே பார்க்கமுடியாது என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்டால்,பதிவ பாருங்கன்னு சொல்லி விட்டு போனை கட் செய்துவிட்டார்.
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள் பதிவு போட்டவருக்குகாதலி கிடைத்து விட்டாளா? அந்த மகிழ்ச்சியில் மனுசன் ஏதாவ்து பதிவு போட்டுயிருப்பார்ன்னு நெனைச்சி பெட்டியை திறந்து பார்த்தா பற பற பட்டாம்பூச்சி பதிவுபோட்டு நமக்குபட்டாம்பூச்சி விருதுகொடுத்துட்டார்.

இதென்னடா பதிவுலகத்துக்கு வந்த சோதனை நமக்கெல்லாம் விருது கொடுத்து இருக்கார்.அதுவும் நான் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்.பதிவு எழுத வந்த மூன்று மாதத்தில்விருதா? அப்படின்னுங்க,கார்த்திகைபாண்டியரிடம் இதெல்லாம் நமக்கு வேண்டாங்க வேற நல்ல எழுதற பதிவருக்கு கொடுக்க சொன்னா,அதெல்லாம் முடியாது கொடுத்தது கொடுத்ததுதான்,பாசத்தோடு கொடுப்பதை ஏற்றுகொள்ளவேண்டும் என்றார்.

ஒருவேளை இதுவும் நம்ம அரசாங்கம் கொடுக்கும் விருதுபோன்று வேண்டபட்டவர்களுக்கு விவேகமாக கொடுக்கும் விருதுபோல,பதிவுலகில் பாசமிகு பாண்டியர் கொடுக்கிறார் என நினைத்து விருது பட்டயத்தை பசை போட்டு ஒட்டிவிட்டேன் நமது தளத்தில்.சும்மா சொல்லகூடாது அதை ஒட்டியபிறகு புதிய புதிய நண்பர்கள் எல்லாம் வந்து வாழ்த்து சொன்னபோது
சந்தோசமா இருந்துங்க.

போனவாரம் நான் விருது யாருக்கும் கொடுக்காமல் இருப்பதை பார்த்த ஒரு பொய்யன பொய்யபேசும் தமிழன் நான் விருது கொடுத்ததாக பதிவு போட்டு விருது இன்னும் கொடுக்காமா என்ன செய்யறிங்கன் கேட்க அப்பதான் நமக்குதெரிந்தது இந்த விருதுதை யாராவது மூன்றுபேருக்கு கொடுக்க வேண்டும் என்று சரி யாருக்கு கொடுப்பது என்று யோசிக்கையில் என்னுடைய ஞாபகத்திற்குவந்த மூன்று நண்பர்கள்

சிலகவிதைகள் சகோதரி உமா
2006 ல் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இன்று வரை பல கவிதைகள் எழுதியவர்.இவரது மரபுகவிதைகள் பெரும்பாலும் சமுதாய சாடலாகவே
இருக்கும்.சில நேரங்களில் வென்பா முலம் தனது கருத்தை தைரியமாக சொல்பவர்.அன்றாட சமுதாய நிகழ்வுகளை கூட கவிதைகளால் பதிவுலகத்திற்கு தெரிவித்துவிடுவார்.இவருடை தளத்தில்உள்ள சுட்டிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்த தளமாகவே இருக்கும்.

சாமானியனுக்கு சகல ஞானமும் சென்று சேர வேண்டும் என்று எழுதும் தஞ்சையில் பிறந்து சிங்கையில் பனிபுரியும் .ஞானசேகரன்.பதிவுகளில் சதம் கண்டு அன்றாட பிரச்சனைகளை அலசி பாமரனுக்கும் புரியஎளிமையாக எழுதுபவர்.தனது தளத்தில்ஒரு மினி நூலகத்தையே வைத்திருப்பவர்
தனதுதளத்தை புதிதுபுதிதாக அலங்கரிப்பதில் அலாதிபிரியம் என்பதை இவரது தளத்தை பார்த்தால் புரியும்.

"உழவனின் உளறல்கள்" உலகத்தில் உழவன் எப்படியோ?அதுபோல் இந்த உழவனின் உளறல்கள் பதிவுலகத்தில்.சாரசரி மனிதனின்அன்றாட
வாழ்க்கையை மிக எளிமையாக கவிதைகளாக எழுதுபவர்.இவரது தளத்தை பார்த்தால் ஒரு கவிதை தொகுப்பு போல்தான் இருக்கும்.பதிவுகளால் மட்டும் அரியபட்டவர். இவரை பற்றி எனக்கு தெரியாதுஇருந்தாலும் இவரது பதிவு எனக்கு பிடிக்கும்.

அப்பறம் நமக்கு ஒரு சந்தேகம் இந்த விருதுக்கு ஏன் பட்டாம்பூச்சி பெயர் வந்துச்சிங்கோ ஒரு வேளை பட்டாம்பூச்சி மலருக்கு மலர் தாவுவது போல் இதுவும் பதிவருக்கு பதிவர் போகவேண்டும் என்பதாலோ?
பதில் சொல்லுங்க பாசகார நண்பர்களே.

Wednesday, April 15, 2009

"விரோதி"க்கு வந்த சோதனை

நேற்றுவந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கு பதில் வாழ்த்து சொல்லாமா, வேண்டாமா, என்று எனக்கு ஒரே குழப்பமாகயுள்ளது.

ஏற்கெனவே தைமுதல் நாள்தான் தமிழ்புத்தாண்டு என்றுவாழ்த்துகூறிய திராவிட நண்பர்களிடைய சித்திரையில்தானே தமிழ்புத்தாண்டு என சொல்ல,அவர்கள் எங்கதலைவ்ர் உலகதமிழறிஞர்களைகலந்து தை திங்கள்தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட‌வேண்டும் என்று சட்டம் போட்டது தெரியதா? உலகமே ஏற்றுகொண்டு உள்ளது, உனக்கு என்னடா அப்படின் கேட்க,எதுக்குடா வம்பு நாமும் வாழ்த்து சொல்லிவிட வேண்டியதுதானுன். எல்லோருக்கு வாழ்த்து சொல்லிகொண்டாடிய முன்று மாதத்திற்குள்.

மறுபடியும் நேற்று பதிவுலக நண்பர்களின் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளின் குறுஅஞ்சலை பார்த்தவுடன் ஒரேவருடத்தில் இரண்டுதமிழ்புத்தாண்டா? கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது.இது பற்றி இன்று வாழ்த்து அனுப்பிய நண்பரும் ஆண்மிகத்திலும் சாஸ்திரத்திலும் அதீத நம்பிக்கை உள்ள வங்கியில் பனியாற்றுபவரிடம்,இதைதான் தைமாதத்தில் கொண்டாட சொல்லி சட்டம் போட்டு,நண்பர்கள் சொல்ல நானும் கொண்டாடிவிட்டேனே என்று சொல்ல, அவருக்கு என்மேல் எத்தனை வருட கோபமோ தெரியவில்லை மனுசன் ஒரு காய்ச்சி காயத்து விட்டார்.நீ எப்ப அந்தகூட்டத்திலிருந்து வெளியேவருவீயோ,அப்பதான்டா உருப்படுவே அப்படின்னு சாபமே கொடுத்துட்டார்.பிரச்சனை வந்தா முன்னாடி நிக்கற பிறப்புகளையும், தோழர்களை விட்டு எப்படிங்க வெளியவரமுடியும்.நீங்க இதற்கு விளக்கம் சொல்லுங்கோனுன் கேட்க.

பத்து பேர்சேர்ந்து கூட்டம் போட்டு சட்டம் கொண்டுவந்தால் சரித்திரம் மாறிவிடுமோ!
அப்படின்னா ஒரு சட்டம் போட்டு ஈழத்து பிரச்சனையை ஏன் தீர்க்க‌முடியல,தமிழகத்தில் உள்ள லஞ்சத்தையும்,வறுமையும் சட்டம் போட்டு ஒழிக்கவேண்டியதுதானே.............

நான் குறுக்கிட்டு அய்யா சாமி புத்தாண்டு எப்பகொண்டாடலாம் அதை சொல்லு முதல்ல........

அததான்டா சொல்லவருகிறேன் என்று வானசாஸ்திரத்தையும், கிரஹகநிலையும், ஆதிமனிதனின் பருவகால கணக்குகளையும், அப்போதைய குமரிநிலப்பரப்பு அதன் பின் தமிழர் இருப்பிடம்பற்றி மிக மிக.....நீண்ட விளக்கம்கொடுத்து.சித்திரை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டுனுன் சொல்லிமுடிக்க நம்ம அலைபேசி பேட்டரியில்சார்ஜ் போகவும்சரியா இருந்ததுங்கோ. அவர்சொன்னவிளக்கத்தைஎழுதும் அளவிற்கு எனக்கு நேரமின்மையின் பொருட்டும்.நாலுவரியில் எழுதி நானும் இங்கே இருக்கிறேன் என்று காட்டிகொள்ள வேண்டியதால்.சுருக்கமாக சொல்லிவிடறனுங்க.

ஆதி மனிதன் விவசாயம் செய்ய நாட்களை சூரியனைகொண்டும், பருவநிலையை சந்திரனைகொண்டு ஆறுபருவமாக பிரித்து காலத்தை அறிந்துவைத்துள்ளான்.இதில் சூரியன் தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வான் உச்சிக்கு வருவது ஆண்டின் தொடக்கநாளாக கொண்டாடபடுவது பழங்காலத்துகுமரி நிலப்பரப்பின் தமிழர்களின் மரபு அந்த நாள் மார்ச் 21, அதன்பின் குமரிகண்டத்தை பெருங்கடல் ஆட்கொண்டபின் இடம் பெயர்ந்து வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 1, தற்போதயை தமிழகத்திற்கு வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை பத்து,என்வே தமிழனின் மரபுபடி சூரியன்வான் உச்சிக்கு வரும் சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாட‌வேண்டும் என்பது நம் நண்பரின் வாதம்.

இது நம்ம நண்பர் சொல்ல கேட்டு எழுதிய செவிவழி செய்தி. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று என‌க்கு தெரியவில்லை.இருந்தாலும் தமிழ் வருடத்தின் இருபத்திமூன்றாவ‌து விரோதிவருட புத்தாண்டு போகட்டும் அடுத்து வருகிற விக்ருதி வருடபுத்தாண்டு எப்போது கொண்டாடுவது என்று தெரிந்தால் நமக்கும்,அடுத்து ஆண்டு காலண்டரில் போட சிவகாசி மக்களுக்கும் வசதியாக இருக்கும்.

என‌வே அடுத்த தமிழ் புத்தாண்டு எப்போது தைமாதத்திலா?சித்திரையிலா?

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று மக்களிடம் ஒட்டுகேட்டு ஜஸ்கிரிமும் டிப்ஸ்ம் தர நமக்குவசதி இல்லைங்க.

சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.

வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் குழப்பத்தை தீர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

நீங்களும் வழக்கமா பின்னுட்டம் போடுவது போல,
இதிலும் அரசியலா?ஜஸ்கிரிமுக்கு டிப்ஸ்க்கும் விளக்கம் வேண்டும்? மறைந்து இருந்து அம்பு விடுறீங்க,கண்டன பேரணி நடத்துவோம்,ஏன் இப்படி? அப்படின் போடமா

உருப்படியான யோசனை சொல்லுங்க பாசமுள்ள நண்பர்களே

Wednesday, April 8, 2009

மின்னலே! மின்னலே!



மின்னலே! மின்னலே!

நொடியில் மறையும் மாயவனே.

உன் சிதறலை

சிறை பிடித்த‌

வல்லவன் யாரோ?





மின்னலே! மின்னலே!

மின்சார கண்ணனே-உன்னை

தாமிரதகட்டில் மடக்கிய‌

மானிடசக்தியை அறிவீரோ?

அறிந்தால் சொல் ஆற்காட்டற்க்கு

மின்னலில் மின்சாரம்

எடுப்பது எப்படி?



அறுபதுகளில்

எழுச்சி கண்ட‌

கனவுலக நகரம்

கல்தோன்றா மண்தோன்றா!

காலத்து.............

வெட்டி சொல்வீச்சு வீரர்கள்

கவனிப்பரோ!















Thursday, April 2, 2009

உண்மை தொண்டனின் குமறல்


இதிகாச தாசரே

நிறுவனதலைவரே

கற்பை விற்பவள் வேசி

தொண்டனை விற்பவன் யோசி


அஞ்சுரூபா மருத்துவரை

அய்யாவாக்கி அழகுபார்த்த

அன்றாட காய்ச்சிகளை

அய்யர் சாட்சியாக

ரெண்டலவொன்னு ஆட்ட

பகடையாக தொண்டனை

விற்றது ஏனோ


சங்கொத்து இருந்தவனை

சலசலப்பு உண்டாக்கி

கட்சி தொண்டனாக்கி

ஆக்காறாவும் ஆசிட்டும்

அறிய வைத்தாய்

மரவெட்டி பெயரிட்டு

வெளியுலகு அழைக்கவைத்த

அரசபடை சொந்தத்தை

விற்றது ஏனோ


சட்டையடி சவுக்கடி

சாய்ந்திரமோ உடாலடி

சனமே ஏசையில்

பதவியும் கொடுத்து

பவிசசையும் கொடுத்த

பந்தபடை பாட்டாளியை

விற்றது ஏனோ


கற்பைவிற்பவள் வேசி

தொண்டனை விற்பவன் யோசி