Monday, February 23, 2009

தங்க தமிழனுக்குவாழ்த்துகள்

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த

தங்க தமிழனுக்குவாழ்த்துகள்

1929 தொடங்கி இதுவரை எந்த இந்திய இசையாமைபாளர்க்கும் கிடைக்காத ஒரு அங்கீகாரம்.இன்று தமிழனாய் நீ பெற்று கொடுத்துயிருக்கிறாய்.இந்திய இசையை உலக அரங்கில்தலை நிமிர்ந்து பார்க்கவைத்த முதல் இந்தியன். இரண்டுபிரிவுகளில் ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான்.அவர்களை வாழ்த்துகிறேன்


மும்பை நகரின் குடிசைகள்,அமுக்கான தெருக்களையும், ஏழ்மையும் படம் பிடித்து உலக அரங்கில் இந்தியாவை சிறுமை படுத்திவிட்டார்கள் என்ற சர்ச்சைக்கு இடையில் எட்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருது பெற்றபடம் ''ஸ்ல்ம் டாக் மில்லியனர்"இதில் பின்னனி இசை,பாடல் இரு பிரிவிலும் சிறந்தாக தேர்தெடுக்கபட்டுஆஸ்கார் என்னும் நாண்கு கிலோ தங்கசிலையை பெற்ற தங்கதமிழா. இன்று தொடங்கிய கணக்கு,வரும் வருடங்களில் இந்திய திரையுலகில் தொடரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளாய்.

"தாய் மண்ணே வணக்கம்" பாடி தேசபற்றை பொங்கசெய்த தமிழனே இதுபோல் திருக்குறளை உன் இசையால் உலக அரங்கிற்கு எடுத்து சென்று. தமிழனின் பெருமை உலகறிய செய்யும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்

Thursday, February 19, 2009

காதலர்தின கொண்டாட்டமும் திண்டாட்டமும்

சென்றவாரம் அனைத்து ஊடகத்திலும்,இவ் வலைபூவிலும் அதிகம்

முக்கியத்துவம்பெற்ற செய்தி காதலர்தினசெய்தியாகதான் இருக்கும்

என்பதில்ஜயமில்லை. கர்நாடக மாநிலதில் காதலர்தினம் திண்டாட்டம்

ஆகிவிடுமோஎன்றசூழ்நிலையில்எதிர்ப்பு அமைப்புகளின்கைது

நடவடிக்கையில் காதலர்க்குகொன்டாட்டம்.கோவையில் இந்து முன்னனி

வீரவணக்க நாள் மற்றும்கொங்கு அரசியல் மாநாடு முன்னிட்டும்

காவல்துறையின்பலத்த பாதுகாப்பில்காதலர்களுக்குசற்று திண்டாட்டம்தான்.

திருச்சியில்மலைகோட்டை,மற்றும் முக்கொம்புவில் காதலர்களுக்கு

இரண்டு நாட்கள் மகா கொண்டாட்டம்.ஆனால் பாவம் பிரம்மசாரியான

உச்சிபிள்ளையாருக்குபடுதிண்டாட்டம்.

வடமாநிலங்களில்கொண்டாட்டங்கள்இருந்தபொதிலும்,திண்டாட்டகளும்

அதிகம்.குறிப்பாகஜார்கண்ட்மாநிலத்தில்காதலர்தினம்,கொண்டாடிய பெண்களைசிறைபிடித்தது,ஆண்களைதோப்புகராணம்போடவைத்துதிண்டாட்டம் கொடுத்துள்ளனர்..சே அமைப்பினர்.காதலர்தினம் கொண்டடுவது இந்திய

அமைப்புசட்டதில்குற்றமா?.அப்படிஇருதாலும், தண்டனை கொடுக்கும் அதிகாரம்

இவர்களுக்கு யார் கொடுத்தது,இது மனித உரிமை மீறல் இல்லையா? அங்கே மனித உரிமை கழகங்கள் திண்டாட்டதில் இருக்கிறதா.அல்லது பீகார் பினாகுமாரியின் புதுமையில்மறைக்கபட்டுவிட்டதா. சிறை பிடித்ததை புகைபடம் எடுத்து வெளியிடும் செய்திதாள்க்கு கொண்டாட்டம். அதில் யாரேனும் தவறான முடிவுக்கு சென்றால் செய்திதாள்கள்பொறுப்புஏற்கதயரா?.

நம் வலைபூவில் பெரும்பாலும் திண்டாட்டம் இல்லாத காதலர் தின கொண்டாட்டங்கள் நிறைந்த பதிவு வாரம்.

Tuesday, February 10, 2009

கலாச்சார சீரழிவு

கடந்த வாரம் செய்திதாளில் படித்தது.
காதலர் தினத்தில் சந்திக்கும் காதலர்களை பதிவு அலுவலத்திற்கு அழைத்துசென்று திருமணம் செய்து வைப்போம் என ஒரு அமைப்புமிரட்டியுள்ளது. இது அத்துமிறிய செயல் எனவும்.இல்லை இல்லை இது சரியானதுதான் நம் கலாச்சாரத்திற்கு என்று வாதம் நடைபெற்றுகொண்டு இருக்கையில்,கடந்த இரு நாட்களுக்கு முன்செய்திதாளில் ஒரு அமைப்பை சேர்ந்த பெண் பேட்டி கொடுக்கிறார் எனனவென்று, ஒரின சேர்கையாளர் அனைவரும் இன்றுபுதிதாகஅமைப்புஉருவாககியுள்ளோம்.ஒரின சேர்க்கையாளர் பலர் இங்குயுள்ளனர்,திருமணமாகி குழந்தை பெற்றவர்களும்,கல்லுரி மாணவிகளும் இதில் அடக்கம்,எங்கள் இன்னல்கள் ..........(அந்த கண்றாவி நமக்கு எதற்கு) எனவே எங்களுக்கு சட்டபுர்வமான அங்கீகாரம் வேண்டும்,என அரசிடம் கோரிககை வைக்கிறோம்.

இது ஏதோ மேலைநாடுகளில் எடுக்கபட்ட பேட்டி என நினைத்துவிடதீர்கள் சாட்சாத் நம் சென்னையில் கடந்த வாரம் ஒரின சேர்கையாளர்கள் சங்கம் ஆரம்பித்து (நாட்டில் இதற்கெல்லாம் சங்கமா) செய்திதாள்களுக்கு கொடுக்கபட்டபேட்டி. இதை எல்லாம் பார்க்கும் போது ரசே..அமைப்பினர் செயல் ஒன்றும் தவறாக தெரியவில்லை. மனதை பரிமாறிகொள்ளும் காதலையே எதிர்க்கும் நம் நாட்டில் காமத்தை மட்டுமே பரிமாறிகொள்ளும் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம், அங்கீகாரம் கேட்கும் அளவுக்கு.
மேலை நாட்டில்யுள்ள நல்ல விசயங்களை தவிர்த்துவிட்டு.
அவர்களே அருவருக்கும் இதை பின்பற்றுவது நாட்டின் கலாச்சார சீரழிவு ஆகும்.

நட்பின் புனிதத்தைக் களங்படுத்தி சந்தேகபடவைக்கும் இழிசெயலை வேரிலே அழிப்போம். நல்லாசிரியர் விருது பெரும் செய்தியை நாலுவ்ரியில் போடும் பத்திரிக்கை அன்பர்களே,இந்த கலாச்சார சீரழிவாளர்களுக்கு கால் பக்கம் ஒதுக்கவது ஏன்? ஜனநாயகத்தின் நான்காவ்து துண் என்று சென்னால் மட்டும் போதுமா, ஜனநாயக நாட்டின் கலாச்சாரம் பற்றி கவலை இல்லையா? இனி மேலாவது இந்த இழிசெயலை இருட்டிப்பு செய்யுஙகள்.வீட்டின் கலாச்சாரமே,நாட்டின் கலாச்சாரம் எனவே இநத காம இழிவாளர்களை புறம்தள்ளுங்கள். நம் பிள்ளைகளின் நட்பை சந்தேகபடமால் நிம்மதியாக பார்க்கலாம்.உலக கலாச்சாரத்தில் இந்தியாவிற்கு இருக்கும் பெயரையும்,மரியாதையும் காப்போம்.

Wednesday, February 4, 2009

ஊருக்கு உபதேசம்

கல்லுரி கருத்தரங்கம் ஒன்றுக்கு
கருத்துரைக்க வந்தார் பேராசிரியை
கொடியது கொடியது வன்கொடுமை
அதனைவிட கொடியது பெண்னடிமை
என்றுரைத்தார்.

பெண்னடிமையின் ஆனிவேர் வரதட்சனையே
பட்டியியல்யிட்டார் வரதட்சனை கொடுமைதனை
இளையோரே ஏற்போம் சபதம் இன்னாளில்
வேண்டாம் வரதட்சனை என்று
சூளுரைத்தார்

மறுநாள் மணமகள்தேடி சென்றார்
தன்மகனுக்கு, பெண் பார்க்கும் சடங்கு
முடிந்தபின் சட்டென கேட்டார்
எவ்வளவு கொடுப்பீர் என்று இதுதான்
ஊருக்கு உபதேசம்மோ

Saturday, January 31, 2009

நிலவு தொட்டு விடும் துரம் தான்

நான் படித்ததை கேட்டதை பதிவர் வட்டத்தில் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்

கேட்டது….

திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் குடியரசு தினத்தன்று தொலைகாட்சி நேர்கானலில் சொல்லகேட்டது
நிலவில் ஹிலியம்- 3 என்கிற கணிமம் பற்றி ஆராய்ச்சி நடைப்பெறுவதாகவும்.அந்த கணிமம் கண்டுபிடிக்கபட்டால்,
ஒரு கிலோ ஹிலியம்-3 யில் சென்னை நகரின் மின்சார தேவையை நிறைவு செய்யாலம் என்றும்.மேலும்
சந்திராயனுக்கு 2015 வாக்கில் இந்தியா மனிதனை அனுப்பும்போது, நிலவில் உள்ள கணிமவளங்களை கொண்டு இந்தியாவின் எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்ய முடியுமாம்.

படித்தது

நிலா மீது இதுவரை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள்தான் தங்கள் நாட்டு தேசியக்கொடிகளை பறக்க விட்டுள்ளன. சந்திராயன் உதவியுடன் நமது நாடும் 4-வது நாடாக தனது தேசியக்கொடியை பறக்க விட்டு உள்ளது..
இவ் அரிய சாதனையின் திட்ட இயக்குநர் திரு. மயில்சாமி அண்ணாதுரை என்ற கொங்கு தமிழன் என்பதில் எனக்கு, ஏன் உலகளாவிய தமிழர் அனைவருக்கும் பெருமை

ஒரு தமிழன் தயாரித்த செயற்கைக் கோள்தான் நிலாவை முதன் முதலாக ஆழமாக ஊடுருவி துல்லியமான ஆராய்ச்சிகளை , நடத்தி கொண்டுயிருக்கிறது, இதன் மூலம் ஒவ்வொரு தமிழனையும் அண்ணாதுரை பெருமைபடுத்தி உள்ளார். இந்த திட்டப்பணி அண்ணாதுரையுடன் கணிசமான தமிழ் விஞ்ஞானிகளும் இரவு- பகல் பாராது பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

சந்திராயன்-1 விண்கலம் நிலாவின் எந்த பகுதியில் ஆழ்பள்ளம் உள்ளது? எங்கு இயற்கை வளம் உள்ளது? என்பதை
நிலாவை சுற்றி பறந்து வந்து உயர்தரமான படங்களை எடுக்கிறது
இதன் மூலம் நிலாவில் ஒவ்வொரு பகுதியும் எப்படி உள்ளது என்பது சந்திராயன் தரும் தகவல்களைப் பொறுத்தே உலகுக்கே
தெரிந்துவருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில்தான் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா நாடுகள் சண்டை போட்டுக் கொள்ளாமல் சந்திரனை பிரித்துக்கொள்ள வழி ஏற்படப்போகிறது
மற்ற நாடுகள் தங்களின் தேவைக்காக வர்த்தகாக ரீதியாக சந்திராயன் விண்கலத்தை,பயன்படுத்துவது வழியாக இந்தியாவின் மதிப்பும்,ம்ரியாதையும், பொருளாதாரமும் உலகளவில் உயரும் எனவே…..
நிலவு தொட்டு விடும் துரம் தான்

Saturday, January 24, 2009

நட்பு என்பது யாதெனில்.....

பள்ளிக்கு சென்றேன்,
எதிர்வீட்டு நண்பனை மறந்தேன்.
கல்லுரிக்கு சென்றேன்,
பள்ளிகூட நண்பனை மறந்தேன்.
அலுவலகம் சென்றேன்,
கல்லுரி தோழனை மறந்தேன்.
மணமேடை சென்றேன்,
அனைவரையும் மறந்தேன்.

Thursday, January 22, 2009

இன்று புதிதாய்

விமர்சிப்பது எளிது பதிவது கடினம். பதிவு செய்து பார் தெரியும்.
என்ற நண்பன் அறிவுக்கு நன்றி சொல்லி,இப் பதிவை
இந்த சுபதினத்தில் சில வரிகள் உடன்.


சலுகையை கேட்காதே,
உனது வாழ்க்கை பாதையை,
சரிவில் தள்ளி விடும்.

உரிமையை கேள்,
உனது தன்மானத்தை கண்டு,
பெருமையடையும் உன் குடும்பம்.

உழைத்து பார்,
உனது உயர்வை கண்டு
பாராட்டும் உனது ஊர்.