அன்பார்ந்த பதிவுலகபெரியோர்களே,பாசமிகுநண்பர்களே,நேசமிகு கவிஞர்களே.சிந்தனை சிற்பிகளே.........
(தேர்தல் நேரபிரச்சார பேச்ச கேட்டு கேட்டு அதே மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்)
சரி விஷயத்திற்கு வரவோம்.மூன்று வாரத்திற்குமுன்பு நண்பர் கார்த்திகை பாண்டியன் போன்ல் கூப்பிட்டு நண்பா நம்ம பதிவு பாருங்க ஒரு மகிழ்ச்சியான செய்தின்னுசொன்னார்.நான்வெளியில் இருப்பதால்உடனே பார்க்கமுடியாது என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்டால்,பதிவ பாருங்கன்னு சொல்லி விட்டு போனை கட் செய்துவிட்டார்.
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள் பதிவு போட்டவருக்குகாதலி கிடைத்து விட்டாளா? அந்த மகிழ்ச்சியில் மனுசன் ஏதாவ்து பதிவு போட்டுயிருப்பார்ன்னு நெனைச்சி பெட்டியை திறந்து பார்த்தா பற பற பட்டாம்பூச்சி பதிவுபோட்டு நமக்குபட்டாம்பூச்சி விருதுகொடுத்துட்டார்.
இதென்னடா பதிவுலகத்துக்கு வந்த சோதனை நமக்கெல்லாம் விருது கொடுத்து இருக்கார்.அதுவும் நான் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்.பதிவு எழுத வந்த மூன்று மாதத்தில்விருதா? அப்படின்னுங்க,கார்த்திகைபாண்டியரிடம் இதெல்லாம் நமக்கு வேண்டாங்க வேற நல்ல எழுதற பதிவருக்கு கொடுக்க சொன்னா,அதெல்லாம் முடியாது கொடுத்தது கொடுத்ததுதான்,பாசத்தோடு கொடுப்பதை ஏற்றுகொள்ளவேண்டும் என்றார்.
ஒருவேளை இதுவும் நம்ம அரசாங்கம் கொடுக்கும் விருதுபோன்று வேண்டபட்டவர்களுக்கு விவேகமாக கொடுக்கும் விருதுபோல,பதிவுலகில் பாசமிகு பாண்டியர் கொடுக்கிறார் என நினைத்து விருது பட்டயத்தை பசை போட்டு ஒட்டிவிட்டேன் நமது தளத்தில்.சும்மா சொல்லகூடாது அதை ஒட்டியபிறகு புதிய புதிய நண்பர்கள் எல்லாம் வந்து வாழ்த்து சொன்னபோது
சந்தோசமா இருந்துங்க.
போனவாரம் நான் விருது யாருக்கும் கொடுக்காமல் இருப்பதை பார்த்த ஒரு பொய்யன பொய்யபேசும் தமிழன் நான் விருது கொடுத்ததாக பதிவு போட்டு விருது இன்னும் கொடுக்காமா என்ன செய்யறிங்கன் கேட்க அப்பதான் நமக்குதெரிந்தது இந்த விருதுதை யாராவது மூன்றுபேருக்கு கொடுக்க வேண்டும் என்று சரி யாருக்கு கொடுப்பது என்று யோசிக்கையில் என்னுடைய ஞாபகத்திற்குவந்த மூன்று நண்பர்கள்
சிலகவிதைகள் சகோதரி உமா
2006 ல் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இன்று வரை பல கவிதைகள் எழுதியவர்.இவரது மரபுகவிதைகள் பெரும்பாலும் சமுதாய சாடலாகவே
இருக்கும்.சில நேரங்களில் வென்பா முலம் தனது கருத்தை தைரியமாக சொல்பவர்.அன்றாட சமுதாய நிகழ்வுகளை கூட கவிதைகளால் பதிவுலகத்திற்கு தெரிவித்துவிடுவார்.இவருடை தளத்தில்உள்ள சுட்டிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்த தளமாகவே இருக்கும்.
சாமானியனுக்கு சகல ஞானமும் சென்று சேர வேண்டும் என்று எழுதும் தஞ்சையில் பிறந்து சிங்கையில் பனிபுரியும் ஆ.ஞானசேகரன்.பதிவுகளில் சதம் கண்டு அன்றாட பிரச்சனைகளை அலசி பாமரனுக்கும் புரியஎளிமையாக எழுதுபவர்.தனது தளத்தில்ஒரு மினி நூலகத்தையே வைத்திருப்பவர்
தனதுதளத்தை புதிதுபுதிதாக அலங்கரிப்பதில் அலாதிபிரியம் என்பதை இவரது தளத்தை பார்த்தால் புரியும்.
"உழவனின் உளறல்கள்" உலகத்தில் உழவன் எப்படியோ?அதுபோல் இந்த உழவனின் உளறல்கள் பதிவுலகத்தில்.சாரசரி மனிதனின்அன்றாட
வாழ்க்கையை மிக எளிமையாக கவிதைகளாக எழுதுபவர்.இவரது தளத்தை பார்த்தால் ஒரு கவிதை தொகுப்பு போல்தான் இருக்கும்.பதிவுகளால் மட்டும் அரியபட்டவர். இவரை பற்றி எனக்கு தெரியாதுஇருந்தாலும் இவரது பதிவு எனக்கு பிடிக்கும்.
அப்பறம் நமக்கு ஒரு சந்தேகம் இந்த விருதுக்கு ஏன் பட்டாம்பூச்சி பெயர் வந்துச்சிங்கோ ஒரு வேளை பட்டாம்பூச்சி மலருக்கு மலர் தாவுவது போல் இதுவும் பதிவருக்கு பதிவர் போகவேண்டும் என்பதாலோ?
பதில் சொல்லுங்க பாசகார நண்பர்களே.