மத்தியஅரசின் 2009 2010 பட்ஜெட்டில் அரசியல்கட்சிக்கு கொடுக்கும் அன்பளிப்புக்கு வருமானவரி விலக்கு அளித்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,அரசியல்வாதிகளுக்கு நன்கொடை கொடுக்கவேண்டும் என்றுசொல்லாமல் சொல்வதுபோல் உள்ளது என்பது மக்களின் கருத்து. அரசியல்வாதி வாங்கினால் அன்பளிப்பு, அரசு ஊழியன் வாங்கினால் லஞ்சமா? இதுநேற்று நான் சந்தித்தஅரசு ஊழியரின் கேள்வி.
நிலம் வாங்கி கிரயம் செய்வதில் தொடங்கி,நிறுவனம் தொடங்கும்வரை பதிவுதுறை,
உள்ளாட்சிதுறை,வருவாய்துறை,மின்சாரதுறை,தொழில்துறை,என எல்லாதுறைகளிலும் அவர்களுக்கு அனுமதி வழங்க சில வேலைகளையும் அவர்களுக்கு செய்து கொடுப்பதற்கு நாங்கள் ஏதாவது வாங்கினால் லஞ்சம் வாங்குவதாக கூப்பாடுபோடுகிறார்கள்,ஆனால் எந்த வேலையும் செய்யாமல்கரைவேட்டிகள் ரசீதுபுக் துக்கிகொண்டு வந்துவிட்டால் அன்பளிப்பு என்றுகொடுக்கிறார்கள்,இதற்கு இப்போது அரசங்கஅனுமதியும்கொடுத்துவிட்டார்கள் என நமதுஅரசங்க ஊழியர் நண்பர் புலம்பி அவர் கேட்ட கேள்விதான் பதிவின் தலைப்பு.
"அன்பளிப்பு வேண்டுவோர் சங்க மூலம் அனுகவும்" என்கிற அறிவிப்பு பலகைகளை எங்க ஊரில் நீங்க பார்க்கலாம் அந்த அளவுக்கு நொந்தபோன நிறுவனங்கள் இங்குஅதிகம்,கட்சி பாகுபாடுயின்றிஅனைத்துவிசயத்திற்கும்,நிதி திரட்டுவதில் பலே கில்லாடிகள்.இருசக்கரவாகன நிதி வசூல்புக் அடித்து பத்துசக்கர வாகனம் வாங்குஅளவிற்கு வசூல் செய்யும் சூரர்கள் நிறைந்த ஊரில்,இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிதி கொடுக்கமறுத்தால் அதை மனதில் வைத்துகொண்டு லெட்டர்பேடுகட்சிகள்கூட நடத்தும் பந்த்சமயங்களில்தாக்குதற்கு பயந்து பந்த என்றாலே விடுமுறை என்று தொழிலாளர்கள் சுற்றுலாகிளப்பும் அளவிற்கு அன்பளிப்பு ஆட்டிபடைக்கிறது இங்கு,இனி வரி விலக்கு இருக்கிறது என்று சொல்லி தைரியமாக ரசீதுபுக் துக்கிகொண்டுவந்துவிடுவார்கள் என்ற கவலை இப்போதே பலருக்கு வந்துவிட்டது.
கட்அவுட் நிதியில் தொடங்கி கட்சிமாநாடு வரை நிதி கொடுக்கும் பெரும் தொழில்நிறுவனங்களுக்கு அந்த பணத்தை கணக்குகாட்டலாம் என்பது சிறியஆறுதல்,ஆனால் சிறு,குறு நிறுவனங்களுக்குதிண்டாட்டம்தான். ஆளும்கட்சி முதல் லெட்டர்பேடு கட்சிவரை இனி ரசீதுபுக்கை தூக்கிகொண்டு
வசூல் வேட்டையில் இறங்கிவிடுவார்கள்.இப்படி வசூல் செய்து சேர்த்த பணத்தைதான் தேர்தல் நேரங்களில் செலவு செய்கிறார்கள்,ஆனால் ஏதோஇவர்கள் கையில் இருந்துகொடுப்பதுபோல் ஓட்டுக்கு அவ்வளவு கொடுத்தோம்இவ்வளவு கொடுத்தோம் என அளப்பார்கள்.இந்த அறிவிப்பை பார்த்தால் அரசியல்கட்சிக்கு தொழில்நிறுவனங்கள் நன்கொடை கொடுக்கவேண்டும் என்றுமறைமுக சட்டம் போட்டமாதிரிதான் தெரிகிறது.
கோவில்திருவிழா நிதிவசூல் செய்தால் திருவிழா முடிந்தபின் ஒருரூபாய் கொடுத்துயிருக்கிறேன் கணக்குகேட்க எனக்கு உரிமையுள்ளது என்று ரவுசுவுடும் மக்கள்,இந்த அரசியல்வாதிகளிடம் கணக்குகேட்ட சரித்திரம் உண்டா?இதனால்தான் ரசீதுபுக் அடித்து பொழப்புநடத்தும் ஊருக்கு நாலுபேர் இனிதெருவுக்கு நாலுபேரகாக மாறுவார்கள்.
நன்கொடை கொடுப்பவர்கள் நன்கொடைவாங்குபவரிடம் கணக்கு கேட்கும் உரிமை உண்டு என சட்டத்தில் இடமுள்ளது என்றுகூறுகிறார்கள்,அப்படியானல் அரசியல்கட்சி வசூலிக்கும் நன்கொடைக்கு கணக்கு கேட்க சட்டத்தில் இடமுள்ளதா?இது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அரசியல் கட்சிக்குவிளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவர்களா?இப்படி வழக்கு தொடருவார்கள் என்ற பயம் வந்தால்தான் அவர்களும் கொஞ்சமாவது திருந்துவார்கள் இல்லையெனில் இன்று நிறுவனங்களில் வசூல் வேட்டைநடத்துபவர்கள் நாளைவீட்டிற்கு வீடு நடத்து காலம் வெகு தொலைவில் இல்லை