Saturday, March 14, 2009

கொள்கைசிற்பிகளே வருக! வருக!


யராது முயற்சித்து
ற்றல் பலவணி
ந்தியாவை
லோகத்திற்கு
யர்த்தி
ர்தோறும்
ழுச்சி
ற்றம்பெற
ம்பொறி ஆட்சி செய்ய‌
ற்றுமையுடன்
டி
ஒள வியமில்லா
க்கு கோட்டையாகுக‌

கொண்டவர் எல்லாம் கூடியதுயில்லை, கூடியவர் எல்லாம் கொண்டவரும் இல்லை


என்னங்க குழப்பமாக இருக்க,எனக்கும்தானுங்கோ,
ஆமாம் நீங்க எத சொல்ல வாரீங்க‌


Wednesday, March 11, 2009

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கல்விதகுதி‍ ஏதும் தேவையில்லை

உயரம் மைக் எட்டும் உயரம்

எடை நாற்காலி தூக்கும் அளவிற்கு

நன்னடத்தை சிறை சென்றவர்க்குமுன்னுரிமை

பிறதகுதிகள்

1)பல வழக்குகளை சந்தித்து அனுபவமபெற்றுயிருக்கவேண்டும்

2)சுமார் ஜந்து கோடி செலவு செய்யும்நபர்

(இதை பத்து அல்லது நுறு மடங்காக எடுப்பது உங்கள் திற்மையை பொருத்தது)

சம்பளம்

அடிப்படை சம்பளம் - 12,000/ மாதம்

பஞ்சபடி - 10,000/மாதம்

அலுவலகபடி - 14,000/மாதம்

பயனபடி - 48,000/மாதம்

பிற சலுகைகள்

இந்தியா முழுவதும் இலவச இரயில் பயனம்,

40 விமான பயனங்கள்/ஆண்டுக்கு

50,000 யுனிட்டு இலவச‌மின்சாரம்

1,70,000 இலவச தொலைபேசிஅழைப்புகள்

விண்ணப்பம் பெறும் தேதி ,நேர்முக தேர்வு ஜந்து கட்டமாக நடைபெறும்(அனைத்து செய்திதாள்களையும் பார்க்க‌)

விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்

உடன் பிறப்பு கோச்சிங் சென்டர்

உடன் பிறவா கோச்சிங் சென்டர்

தாமர கோச்சிங் சென்டர்

பேரியக்க‌ கோச்சிங் சென்டர்

பசுமை கோச்சிங் சென்டர்

தோழர்கள் கோச்சிங் சென்டர்

மறுமறந்த‌ கோச்சிங் சென்டர்

மனைவி,மைத்துனர் கோச்சிங் சென்டர்

இவர்கள் பரிந்துரைக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டும்தேர்வு எமுத அனுமதியளிக்கபடுவார்கள்

அனைத்து லெட்டர் பேடு கோச்சிங் சென்டர்

சுயம் கோச்சிங் சென்டர்

இங்கிருந்து வரும் விண்ணப்பங்கள் முடிந்தயளவு நிராகரிக்கபடும்

முக்கியமானத மறந்துட்டனங்க அதானுங்க‌

வே லையின் பெயர் மக்கள் பிரதநிதி

காலியிடங்கள் 536

வந்தவர் எல்லாம் வென்றததும் இல்லை

வென்றவர் எல்லாம் வந்ததும் இல்லை

Saturday, March 7, 2009

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்


கருவரை தொடங்கி கல்லரை வ்ரை சம்பளம்யில்லா வேலைகாரிகளுக்கும்

கள் உண்டாலும் கணவன் "புல்" னாலும் புருசன் என நொந்தகாரிகளுக்கும்

வகுப்பறையிலிருந்து அலுவலகம் வரை தொடரும் ஆபாசங்களை அலட்சியப்டுத்தும் அசட்டைகாரிகளுக்கும் இடஒதுக்கிட்டில் தலைவியாகி கைஒப்பம் மட்டும் இடும் பரிதாபகாரிகளுக்கும்.

படிததபெண்,புதுமைபெண்,புரட்சிபெண் எனறாலும் கல்யான சந்தையில் விலை கொடுத்து விற்கபடும் மோககாரிகளுக்கும்

உலக மகளிர் தின வாழ்த்துகள்



வாழ்த்தபட்டவர்கள் வாழ்ந்துவிடவில்லை

வீழ்த்தபட்டவர்கள் எல்லாம் வீழ்ந்துவிடவில்லை

காலங்கள் மாறும் கனவுகளும் மாறும்

கலங்கரை விளக்கவாய் அன்று

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்




Wednesday, March 4, 2009

வழக்கொழிந்த சொற்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் கார்த்திகைப் பாண்டியன் வழக்கொழிந்தசொற்கள் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.இரண்டு நாளாக இந்த பக்கம்வரததால் நேற்று என்னை தொடர்பு கொண்ட கா.பா. என்ன நண்பா பதிவபார்த்தியா என கேட்டபோதுதான் தெரிந்தது "தல" நம்மள சிக்கவச்சமேட்டரு. சரிபார்க்கலாம்னு சொல்லிட்டு.
உடனே என் நண்பன் தமிழ் புலவனை கூப்பிட்டு எனக்கு பத்து "வழக்கொழிந்தசொல்" சொல்லுடான் கேட்டேன், அவனோ வழகொழிந்த சொல்லா? அல்லதுவழக்குமருவிய சொல்லா?அப்படின் கேட்க. எனக்கு சந்தேகம் வந்து மறுபடியும்பதிவை பார்த்து,வழக்கொழிந்த சொற்கள்தான் சொல்லிட்டு ஆர்வக்கோளாறுகாரணமாக இரண்டுக்கும் என்ன வித்தியாசம்னு கேள்வி கேட்க. அதகாகப்பட்டதுவழக்கத்திலிருந்து முற்றிலும் அழிந்த சொல்,வழக்கத்தில் இருக்கு ஆனால்உச்சரிப்பு மட்டும் மருவி இந்த மாதிரி...........இந்த மாதிரி......... வரும் ஆனா வராதுகணக்கா சொல்ல ஆளைவுடுங்கட சாமினுட்டு துங்க போனேன்.
அப்ப பார்த்து கார்த்திகைப் பாண்டியன் போன்போட்டு கவின் மெயில்அனுப்பிட்டாரு அவர் வெளியூரில் இருப்பதால் எமுதமுடியவில்லை. (தப்பிக்கஇப்படியும் வழியிருக்கா ) எனவே நீங்க கண்டிப்பாக பதிவு எமுதிஆகுனும்ன்மெரட்ட.என்னங்கட வம்பபோச்சி அப்படின்ங்கோ, சரி நம்ம கொள்கைபடி(அதுஎன்ன உங்க கொள்கையின் நீங்க கேட்கறது காதுல கேக்குதுங்க) அதானுங்கசரியா? தப்பா? மனசுல இருக்கறத சொல்லிவிடு தப்பா இருந்ததிருத்திக்கோ,சரியா இருந்த மெச்சிக்கோங்கற கொள்கைபடி எனக்கு தெரிந்ததைஎமுத ஆரம்பிச்சனுங்க இத படிக்கறதும் இடிக்கறதும் உங்க விருப்பங்கோ.




வழக்கொழிந்த சொற்கள்
ஆர்கலிகடல்
சூத்திரம் - வஞ்சனை, பழிவாங்கு
அடை - முல்லை
எச்சம் - மிச்சப்படும் பொருள்
புறவுகாடுகள்
வைகல்பொழுது
உதிரம் - இரத்தம்
உகிர் - நகம்
தக்கிணைகாணிக்கை
முகட்டு வழிவாயிற்படி
அளாவிகரைத்தல்

வட்டார
வழக்கொழிந்த சொற்கள்
தொறப்புகுச்சி-சாவி
பைய - மெல்ல
தண்டல்- வரி
வெள்ளனா -அதிகாலையில்
வெகுளான்-கோபகாரன்
தப்பா இருந்த சொல்லிருங்க.அப்புறம் யாரவது இரண்டு பேரை பதிவுக்குஅழைக்கவேண்டுமாம்.

"வென்பா கவிஞர்" அகரம் அமுதா
"சிலகவிதைகள்" உமா
அன்போடு வருக
பதிவுவொன்று இடுக

Monday, February 23, 2009

தங்க தமிழனுக்குவாழ்த்துகள்

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த

தங்க தமிழனுக்குவாழ்த்துகள்

1929 தொடங்கி இதுவரை எந்த இந்திய இசையாமைபாளர்க்கும் கிடைக்காத ஒரு அங்கீகாரம்.இன்று தமிழனாய் நீ பெற்று கொடுத்துயிருக்கிறாய்.இந்திய இசையை உலக அரங்கில்தலை நிமிர்ந்து பார்க்கவைத்த முதல் இந்தியன். இரண்டுபிரிவுகளில் ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான்.அவர்களை வாழ்த்துகிறேன்


மும்பை நகரின் குடிசைகள்,அமுக்கான தெருக்களையும், ஏழ்மையும் படம் பிடித்து உலக அரங்கில் இந்தியாவை சிறுமை படுத்திவிட்டார்கள் என்ற சர்ச்சைக்கு இடையில் எட்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருது பெற்றபடம் ''ஸ்ல்ம் டாக் மில்லியனர்"இதில் பின்னனி இசை,பாடல் இரு பிரிவிலும் சிறந்தாக தேர்தெடுக்கபட்டுஆஸ்கார் என்னும் நாண்கு கிலோ தங்கசிலையை பெற்ற தங்கதமிழா. இன்று தொடங்கிய கணக்கு,வரும் வருடங்களில் இந்திய திரையுலகில் தொடரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளாய்.

"தாய் மண்ணே வணக்கம்" பாடி தேசபற்றை பொங்கசெய்த தமிழனே இதுபோல் திருக்குறளை உன் இசையால் உலக அரங்கிற்கு எடுத்து சென்று. தமிழனின் பெருமை உலகறிய செய்யும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்

Thursday, February 19, 2009

காதலர்தின கொண்டாட்டமும் திண்டாட்டமும்

சென்றவாரம் அனைத்து ஊடகத்திலும்,இவ் வலைபூவிலும் அதிகம்

முக்கியத்துவம்பெற்ற செய்தி காதலர்தினசெய்தியாகதான் இருக்கும்

என்பதில்ஜயமில்லை. கர்நாடக மாநிலதில் காதலர்தினம் திண்டாட்டம்

ஆகிவிடுமோஎன்றசூழ்நிலையில்எதிர்ப்பு அமைப்புகளின்கைது

நடவடிக்கையில் காதலர்க்குகொன்டாட்டம்.கோவையில் இந்து முன்னனி

வீரவணக்க நாள் மற்றும்கொங்கு அரசியல் மாநாடு முன்னிட்டும்

காவல்துறையின்பலத்த பாதுகாப்பில்காதலர்களுக்குசற்று திண்டாட்டம்தான்.

திருச்சியில்மலைகோட்டை,மற்றும் முக்கொம்புவில் காதலர்களுக்கு

இரண்டு நாட்கள் மகா கொண்டாட்டம்.ஆனால் பாவம் பிரம்மசாரியான

உச்சிபிள்ளையாருக்குபடுதிண்டாட்டம்.

வடமாநிலங்களில்கொண்டாட்டங்கள்இருந்தபொதிலும்,திண்டாட்டகளும்

அதிகம்.குறிப்பாகஜார்கண்ட்மாநிலத்தில்காதலர்தினம்,கொண்டாடிய பெண்களைசிறைபிடித்தது,ஆண்களைதோப்புகராணம்போடவைத்துதிண்டாட்டம் கொடுத்துள்ளனர்..சே அமைப்பினர்.காதலர்தினம் கொண்டடுவது இந்திய

அமைப்புசட்டதில்குற்றமா?.அப்படிஇருதாலும், தண்டனை கொடுக்கும் அதிகாரம்

இவர்களுக்கு யார் கொடுத்தது,இது மனித உரிமை மீறல் இல்லையா? அங்கே மனித உரிமை கழகங்கள் திண்டாட்டதில் இருக்கிறதா.அல்லது பீகார் பினாகுமாரியின் புதுமையில்மறைக்கபட்டுவிட்டதா. சிறை பிடித்ததை புகைபடம் எடுத்து வெளியிடும் செய்திதாள்க்கு கொண்டாட்டம். அதில் யாரேனும் தவறான முடிவுக்கு சென்றால் செய்திதாள்கள்பொறுப்புஏற்கதயரா?.

நம் வலைபூவில் பெரும்பாலும் திண்டாட்டம் இல்லாத காதலர் தின கொண்டாட்டங்கள் நிறைந்த பதிவு வாரம்.

Tuesday, February 10, 2009

கலாச்சார சீரழிவு

கடந்த வாரம் செய்திதாளில் படித்தது.
காதலர் தினத்தில் சந்திக்கும் காதலர்களை பதிவு அலுவலத்திற்கு அழைத்துசென்று திருமணம் செய்து வைப்போம் என ஒரு அமைப்புமிரட்டியுள்ளது. இது அத்துமிறிய செயல் எனவும்.இல்லை இல்லை இது சரியானதுதான் நம் கலாச்சாரத்திற்கு என்று வாதம் நடைபெற்றுகொண்டு இருக்கையில்,கடந்த இரு நாட்களுக்கு முன்செய்திதாளில் ஒரு அமைப்பை சேர்ந்த பெண் பேட்டி கொடுக்கிறார் எனனவென்று, ஒரின சேர்கையாளர் அனைவரும் இன்றுபுதிதாகஅமைப்புஉருவாககியுள்ளோம்.ஒரின சேர்க்கையாளர் பலர் இங்குயுள்ளனர்,திருமணமாகி குழந்தை பெற்றவர்களும்,கல்லுரி மாணவிகளும் இதில் அடக்கம்,எங்கள் இன்னல்கள் ..........(அந்த கண்றாவி நமக்கு எதற்கு) எனவே எங்களுக்கு சட்டபுர்வமான அங்கீகாரம் வேண்டும்,என அரசிடம் கோரிககை வைக்கிறோம்.

இது ஏதோ மேலைநாடுகளில் எடுக்கபட்ட பேட்டி என நினைத்துவிடதீர்கள் சாட்சாத் நம் சென்னையில் கடந்த வாரம் ஒரின சேர்கையாளர்கள் சங்கம் ஆரம்பித்து (நாட்டில் இதற்கெல்லாம் சங்கமா) செய்திதாள்களுக்கு கொடுக்கபட்டபேட்டி. இதை எல்லாம் பார்க்கும் போது ரசே..அமைப்பினர் செயல் ஒன்றும் தவறாக தெரியவில்லை. மனதை பரிமாறிகொள்ளும் காதலையே எதிர்க்கும் நம் நாட்டில் காமத்தை மட்டுமே பரிமாறிகொள்ளும் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம், அங்கீகாரம் கேட்கும் அளவுக்கு.
மேலை நாட்டில்யுள்ள நல்ல விசயங்களை தவிர்த்துவிட்டு.
அவர்களே அருவருக்கும் இதை பின்பற்றுவது நாட்டின் கலாச்சார சீரழிவு ஆகும்.

நட்பின் புனிதத்தைக் களங்படுத்தி சந்தேகபடவைக்கும் இழிசெயலை வேரிலே அழிப்போம். நல்லாசிரியர் விருது பெரும் செய்தியை நாலுவ்ரியில் போடும் பத்திரிக்கை அன்பர்களே,இந்த கலாச்சார சீரழிவாளர்களுக்கு கால் பக்கம் ஒதுக்கவது ஏன்? ஜனநாயகத்தின் நான்காவ்து துண் என்று சென்னால் மட்டும் போதுமா, ஜனநாயக நாட்டின் கலாச்சாரம் பற்றி கவலை இல்லையா? இனி மேலாவது இந்த இழிசெயலை இருட்டிப்பு செய்யுஙகள்.வீட்டின் கலாச்சாரமே,நாட்டின் கலாச்சாரம் எனவே இநத காம இழிவாளர்களை புறம்தள்ளுங்கள். நம் பிள்ளைகளின் நட்பை சந்தேகபடமால் நிம்மதியாக பார்க்கலாம்.உலக கலாச்சாரத்தில் இந்தியாவிற்கு இருக்கும் பெயரையும்,மரியாதையும் காப்போம்.

Wednesday, February 4, 2009

ஊருக்கு உபதேசம்

கல்லுரி கருத்தரங்கம் ஒன்றுக்கு
கருத்துரைக்க வந்தார் பேராசிரியை
கொடியது கொடியது வன்கொடுமை
அதனைவிட கொடியது பெண்னடிமை
என்றுரைத்தார்.

பெண்னடிமையின் ஆனிவேர் வரதட்சனையே
பட்டியியல்யிட்டார் வரதட்சனை கொடுமைதனை
இளையோரே ஏற்போம் சபதம் இன்னாளில்
வேண்டாம் வரதட்சனை என்று
சூளுரைத்தார்

மறுநாள் மணமகள்தேடி சென்றார்
தன்மகனுக்கு, பெண் பார்க்கும் சடங்கு
முடிந்தபின் சட்டென கேட்டார்
எவ்வளவு கொடுப்பீர் என்று இதுதான்
ஊருக்கு உபதேசம்மோ